சிங்கப்பூரில் 100 பேரில் 15 பேரிடம் கொவிட்-19 மறுதொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரித்தால், புதிய அலை ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அவர் கூறினார்.
தற்போது கிருமி மறுதொற்று விகிதம் 15 விழுக்காடு. அதாவது பாதிக்கப்பட்ட 100 பேரில் 15 பேருக்குக் கிருமி இரண்டாவது முறையாகத் தொற்றியுள்ளது. இந்த விகிதம் 50 விழுக்காட்டுக்கு அதிகரித்தால் புதிய அலை ஏற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று 4,000 தொற்று சம்பவங்கள் பதிவாகின. இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரயிறுதிகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் இடம்பெறுவதால், செவ்வாய்க்கிழமைகளில் தொற்று சம்பவங்கள் அதிகரிக்கும்.
தற்போது கொவிட்-19 நிலவரத்தைப் பற்றி கருத்துரைத்த அமைச்சர் ஓங், மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்படுவர். இதனால் சுகாதார ஊழியர்களின் பளு அதிகரிக்கும் என்றார். நம்மால் இயன்றவரை அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். இதை கடந்துவர நாம் முடிந்தவரை செய்லடுவோம் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.