பெரும் கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசலைத் தடுக்க காவல்துறை அவற்றின் ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதாக உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவேலிங் கூறியுள்ளார். கூட்டத்தைக் கட்டுப் படுத்தவும் அளவுக்கு அதிகமான கூட்டம் திரள்வதைத் தடுக்கவும் போதுமான நுழைவாயில்களும் வெளிவழிகள் இருப்பதை உறுதி செய்யவும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பெரிய நிகழ்ச்சிகளில் அத்தகைய குழப்பங்கள் நிகழ்ந்தால், காவல்துறையினர் தலையிட்டு அதற்கான காரணத்தைக் களைவர் என்று திருவாட்டி சுன் நேற்று கூறினார்.
தேவைப்பட்டால் கூட்டமான இடத்திலிருந்து மக்கள் கலை வதற்கான தெளிவான வழிமுறை களைக் காவல்துறையினர் வழங்குவர் என்றார் அவர்.
பண்டிகைக் காலங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கூட்ட நெரிசலால் ஏற்படக்கூடிய அபாயத்தைச் சமாளிப்பது பற்றி ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
வெளிநாடுகளில் கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நடந்த அசம்பாவிதங்களைத் தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் அக்கேள்வி களை எழுப்பி இருந்தனர். இந்தோனீசியாவிலும் தென் கொரியாவிலும் அண்மையில் நடந்த துயரச் சம்பவங்களில் மொத்தம் சுமார் 270 பேர் மாண்டனர்.
குறிப்பிட்ட பண்டிகைக் காலங்களில் கூட்டம் அதிகமாகத் திரளும் என்று காவல்துறைக்குத் தெரியும் என்றார். அந்நேரங்களில் காவல்துறையினர் அதிக விழிப்புடன் இருப்பதாகவும், எங்கு கூட்டம் கூடுமென அவர்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.