முன்னாள் எஸ்எம்ஆர்டி நிர்வாக இயக்குநர், சிங்போஸ்ட் சிங்கப்பூர் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாகிறார்

சிங்போஸ்ட்டின் சிங்கப்பூர் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரிப் பொறுப்பை திரு ஷாஹ்ரின் அப்துல் சலாம் மே 1 முதல் ஏற்கிறார். திருமதி நியோ சு யினிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்பார் என்று ஏப்ரல் 1 அன்று சிங்போஸ்ட் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது

மூன்று ஆண்டுகளுக்குள் தளவாட நிறுவனமாக மாறும் இலக்கில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பைத் தொடர்ந்து தலைமைத்துவ மாற்றம் இடம்பெறுகிறது.

திருமதி நியோ சு யின் வேறு இடங்களில் தொழில் வாய்ப்புகளைத் தொடர உள்ளார்.

திரு ஷாஹ்ரின் எஸ்எம்ஆர்டி தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை நிர்வாக இயக்குநராகவும் எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷனில் மூத்த துணைத் தலைவராகவும் (உத்திபூர்வ உறவுகள்) இருந்தார்.

செயல்பாட்டு மேலாண்மை, உத்திபூர்வ திட்டமிடல், சொத்து மேலாண்மை, வணிக மேம்பாடு, பொறியியல் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் ஷாஹ்ரின்.

சிங்போஸ்ட் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள நியோவின் பதவிக்காலத்தில் அவரது பங்களிப்புகளுக்கு சிங்போஸ்ட் நன்றியைத் தெரிவித்தது, அவரது தலைமைத்துவத்தின் கீழ் கொவிட்-19 பரவலின்போது ஏற்பட்ட உள்நாட்டு சேவை செயல்திறன் முன்னேற்றம், மின் வணிகம் வளர்ச்சியை சிங்க்போஸ்ட் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!