உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்க அழைப்பில் சிங்கப்பூர் வரும் எழுத்தாளர், ஆவணப்பட, திரைப்பட இயக்குநர் திரு பாரதி கிருஷ்ணகுமாருடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
‘மொழியும் வழியும்’ என்னும் தலைப்பில் அந்த நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தேசிய நூலக வாரியத்தின் 16ஆவது மாடியில் உள்ள ‘தி போட்’ அரங்கில் நடைபெறும்.
இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், பொது மக்களும் கட்டணமின்றி நடத்தப்படும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் மதிய உணவு வழங்கப்படும்.