குழாயைத் திறந்தபோது தண்ணீர் வரவில்லை.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாகத் தண்ணீர் இல்லாமல் திண்டாடினர் புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் சிலர்.
இதற்கான காரணத்தைக் கண்டறிய நகர மன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தண்ணீர் விநியோகத் தடையால் வட்டாரத்திலுள்ள எத்தனை புளோக்குகள் பாதிக்கப்பட்டன என்பது குறித்து தகவல் இல்லை.
இருப்பினும், அனைத்து வீடுகளும் பாதிப்புறவில்லை. ஒருசில வீடுகளில் தண்ணீர் விநியோகம் வழக்கம்போல் இருந்தது.
தண்ணீர் விநியோகம் மீண்டும் பகல் மூன்று மணிக்கு வழக்கநிலைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதேபோல் தண்ணீர் விநியோகத் தடை பிரச்சினையால் புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.