ஒருவரின் ஒப்புதலின்றி நடக்கும் பாலியல் செயல்கள் யாவும் பாலியல் துன்புறுத்தலே. ஒப்புதல் வழங்குவது என்றால் குறிப்பிட்ட ஒரு பாலியல் செயலில் மனமுவந்து ஈடுபடுவதற்காக தானே சம்மதம் தெரிவிப்பதாகும்.
எதற்காக ஒப்புக்கொள்கிறோம், ஒப்புக்கொள்வதன் வழி ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை என்பதை ஒருவர் புரிந்திருப்பதும் முக்கியம்.
இதற்கிடையே, இணையம் வழி நிகழும் பாலியல் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
ஒருவரை இணையம் வாயிலாக தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சி செய்து அச்சுறுத்துவது, அந்தரங்கப் படங்களைப் பகிர்வது, அடையாளத்தைத் திருடி இணையத்தில் பிறருடன் உரையாடுவது போன்ற சம்பவங்களை இது குறிக்கும்.
2020ஆம் ஆண்டில் இத்தகைய இணைய பாலியல் வன்முறை வழக்குகள், 2019ஐக் காட்டிலும் 36% அதிகரித்ததாக 'அவேர்' அமைப்பு தெரிவித்தது.
ஒருவரது ஒப்புதல் இல்லாமல் பாலியல் ரீதியாக கொடுமை இழைத்தாலே, அது குற்றமாகும்.
இதுபோன்ற நிலைமையில் இருப்பவர்கள் உதவி நாடுவதற்குப் பல தளங்கள் உள்ளன.
'அவேர்' அமைப்பின் 'எஸ்ஏசிசி' பிரிவை 6779 0282 என்ற எண்ணில் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
'மெண்டல் ஆக்ட்' அமைப்பின் 24 மணி நேரச் சேவையை 9619 3531 அல்லது 9776 9067 எண்களில் அணுகலாம்.