அகமதாபாத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.
இதனையடுத்து, நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ஓட்டங்கள் குவித்தது. பதிலுக்கு இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 571 ஓட்டங்கள் எடுத்தது. விராத் கோஹ்லி 186 ஓட்டங்களைக் குவித்தார்.
இறுதி நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்தது.
ஆட்ட நாயகன் விருது விராத் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.
தொடர் நாயகன் விருதை 25 விக்கெட்டுகள் வீழ்த்திய ரவிசந்திரன் அஸ்வின் தட்டிச்சென்றார்.