எஸ்ஐஏ

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சிப்பந்தி ஒருவர், விமானம் ஒன்றில் வழுக்கி கீழே விழுந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, $1.7 மில்லியனுக்கு மேல் கோரி அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
ஃபோர்ட்சியூன் சஞ்சிகையின் மிகவும் பாராட்டப்படும் நிறுவனங்கள் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) 29வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலால் சிங்கப்பூரின் பொதுத் துறை அமைப்புகளும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் மனிதவளப் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, 2,000க்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன (எஸ்ஐஏ) ஊழியர்கள் முன்வந்து கைகொடுத்தனர்.
சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு முதல்முறையாக நேரடி விமானச் சேவையைத் தொடங்குகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்றில் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனுக்கு முன்னால் மண்டியிட்டு விமானச் சிப்பந்தி கரண்டியால் அவனுக்கு உணவூட்டுவதைக் காட்டும் இன்ஸ்டகிராம் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.