வேலையின்மை

வேலை கிடைக்காத விரக்தியில் பேரங்காடிகளில் சுமார் 500 பொருள்களை கிழித்துத் திறந்தார் இங் கெங் சூன் என்ற 51 வயதான சிங்கப்பூரர். அவரது குற்றத்துக்கு 22 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கைகளால் திண்பண்டங்களையும் , ஒரு சிறிய கத்தியைக் கொண்டு அரிசி பொட்டலங்களையும் அவர் கிழித்துள்ளார். அதனால் அப்பொருள்கள் பேரங்காடிகளில் விற்பனை செய்யமுடியாமல் போனது.
தேவை அதிகமுள்ள குறிப்பிட்ட சில வேலைகளுக்கான சம்பளத்தை 2024ஆம் ஆண்டில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூரின் 72% நிறுவனங்கள் ஆய்வு ஒன்றில் குறிப்பிட்டுள்ளன.
சிங்கப்பூரில் ஆட்குறைப்பு, வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை 2023 மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வேலைவாய்ப்புகள் குறைந்தன. ஊழியர்களுக்கான தேவை குறைந்தது.
இந்தியாவின் பன்மய, பரந்த, பெரிய சந்தை, ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் உரிய நுழைவாயிலாக வேகமாக உருவெடுத்து வருகிறது.