லீ சியன் லூங்

இம்மாத மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் தாம் தொடர்ந்து அரசாங்கத்தில் பங்கு வகிக்கப்போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றப் போவதாகவும் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
திரு லீ சியன் லூங், சிங்கப்பூரின் பிரதமராகத் தமது கடைசி முக்கிய அரசியல் உரையை ஆற்றவுள்ளார்.
பசுமைப் பொருளியல் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் சிங்கப்பூர் - இந்தோனீசியா இடையிலான ஒத்துழைப்பு தொடரும் நிலையில், இந்தோனீசியாவின் எதிர்காலத் தலைநகரான நுசந்தாராவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர்ப் பிரதமராக இருந்துவரும் திரு லீ சியன் லூங், 2024 மே 15ஆம் தேதியன்று அப்பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்கவுள்ளார். தம்முடைய பதவிக்காலத்தின்போது திரு லீ, இந்தியச் சமூகத்திற்குப் பேராதரவாக, பெருந்துணையாக விளங்கி வந்துள்ளது குறித்தும் அவரது நிர்வாகத் திறன், தலைமைத்துவம் குறித்தும் இளையோர் முதல் பெரியோர்வரை பலரும் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
கடந்த 16 ஆண்டுகளாக, தாம் பிரதமர் லீ சியன் லூங்குடன் கலந்துறவாடியபோதெல்லாம், அவரது கவனம் சிங்கப்பூர், சிங்கப்பூரர்கள் மீதுதான் இருந்தது எனப் புரிந்துகொண்டேன் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் (படம்) தெரிவித்துள்ளார்.