சென்னை: சென்னை திநகரில் கொரோனா கிருமிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சோடியம் நைட்ரேட் கரைசலைக் குடித்த சிவனேசன் என்பவர் உயிர் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் மருத்துவர் ராஜ்குமார் என்பவரை சென்னை போலிஸ் விசாரிக்கிறது.
பெருங்குடி என்ற ஊரைச் சேர்ந்த சிவனேசன், உத்தரகாண்ட் மாநிலத்தில் சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தில் சளி மருந்து உள்ளிட்ட மருந்துகள் தயாரிப்புப் பிரிவில் 27 ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்று தெரிகிறது. மருத்துவர் வீட்டில் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டதாகவும் சோடியம் நைட்ரேட் கரைசலைச் சோதனை முயற்சியாக சிவநேசன் குடித்ததாகவும் கூறப்படுகிறது.