மதுரை: திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என்னும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என முத்துக்குமார், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஜனவரி 11ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை 50% இருக்கைகளுடன்தான் திரையரங்குகள் இயங்க வேண்டும். கிருமிப் பரவல் காலத்தில் பொருளியல் சிக் கல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க இயலாது.
“50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் சூழலில், காட்சிகளை அதிகப்படுத்துவது பற்றிய தகவல் தேவை. 100 விழுக்காடு இருக்கை விவகாரத்தை தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும் என நம்புகிறோம்,” என உத்தரவில் குறிப்பிட்டனர்.
திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான விளக்கம் பெற்று சமர்ப்பிக்க அரசின் தலைமை வழக்கறிஞருக்கு ஆணையிட்ட நீதிபதிகள், வழக்கின அடுத்தகட்ட விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். விஜய் ரசிகர்கள் ‘நன்றி முதல்வரே’ என சென்னை முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி வரும் நிலையில், மத்திய அரசும் நீதிமன்றமும் தடை விதித்திருப்ப தால் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.