ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்துக்கு ஒத்திகை

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழு வதும் ஒரு கோடி பனை விதைகள் நடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான ஒத்திகை சென்னை அருகே உள்ள பழவேற்காடு கடற்கரையில் நடைபெற்றது.

அப்போது ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு 9,300 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், தனியார் சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு ஆகியவை சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடப்பட உள்ளன.

நாட்டு நலப்பணித் திட்ட தினமான எதிர்வரும் 24ஆம் தேதி பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெறும்.

ஒத்திகை நிகழ்ச்சியின்போது, விதைகளை நடவு செய்கையில், ஒரு பனை விதைக்கும் இன்னொரு பனை விதைக்கும் ஒரு மீட்டர் தூரத்துக்கு இடைவெளி இருக்க வேண்டும், பனை விதைகளை எப்படி குறுக்கும் நெடுக்குமாக நட வேண்டும், விதையை எந்த நிலையில் குழியில் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!