சிங்கப்பூர் பயணி தவறவிட்ட கடப்பிதழ்: மீட்டு ஒப்படைத்த பாதுகாப்புப்படை வீரர்

மதுரை: சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தடைந்த சண்முகசுந்தரம் (62) என்ற பயணி தவறவிட்ட ரொக்கப் பணத்தையும் கடப்பிதழையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் கருப்பசாமி பத்திரமாக ஒப்படைத்தார்.

சண்முகசுந்தரம் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது இமானுவேல் சேகரன் குரு பூசையை முன்னிட்டு அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களின் வருகையால் பரபரப்பு நிலவியது.

குடிநுழைவு பரிசோதனைக்குப் பிறகு தனது உடமைகளை காரில் ஏற்றினார் சண்முகசுந்தரம். அப்போது, கடப்பிதழும் ரொக்கப் பணமும் இருந்த கைப்பையை மட்டும் தள்ளுவண்டியில் மறந்து வைத்துச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், விமான நிலைய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த வீரர் கருப்பசாமி தள்ளுவண்டியில் கைப்பை இருப்பதைக் கண்டு அதைச் சோதனையிட்டார்.

அதில், சண்முகசுந்தரம் தவறவிட்டுச் சென்ற கடப்பிதழ்், ரூ.38,000 ரொக்கப்பணம், சிங்கப்பூர் பணம், சில ஆவணங்கள் இருந்தன.

இதன் பின்னர், சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்ட விமான நிலைய அதிகாரிகள் அவரை நேரில் வரவழைத்து, அவற்றை ஒப்படைத்தனர்.

அவர் கருப்பசாமிக்கு நன்றி தெரிவித்தது. சமூக ஊடகங்களிலும் கருப்பசாமிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!