சென்னை விமான நிலைய இணையத்தள பாதிப்பால் பயணிகள் அவதி

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அக்டோபர் 4ஆம் தேதி விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அனைத்துலக, உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதிகாலை 1.30 மணி முதல் தகவல் சேவை பெறமுடியாமல் கணினிக் கட்டமைப்பு ஸ்தம்பித்தது.

இதனால் பயணிகளுக்கு ‘போர்டிங் பாஸ்’ வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விமான நிலைய ஊழியர்கள் அவற்றைக் கையால் எழுதிக் கொடுத்தனர்.

பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. விமானங்கள் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாகக் கிளம்பியதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

துபாய், சார்ஜா, லண்டன், அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் எட்டு விமானங்கள் தாமதமாகச் சென்றன. மேலும், அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி போன்ற 12 இந்திய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.

பிறகு தகவல் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விமானப் புறப்பாடு சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!