இந்தியா

அப்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் வரும் நவம்பர் 7ஆம் தேதி அங்குள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ல் நடைபெறுகிறது. அதற்கான மனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதியுடன் முடிவடைந்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்த 174 பேரில் 16 பேர் பெண்கள் என்று தெரிகிறது.
திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்தில் 26 அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குக் காலாவதியான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலக (சிஏஜி) அறிக்கை தெரிவித்துள்ளது.
கோழிக்கோடு: அண்மையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா கிருமித் தொற்று பரவியது.
திருவனந்தபுரம்: பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், ஒருவர் பாம்பைத் தன் தோளில் போட்டுக்கொண்டு, கைப்பேசியில் படமெடுக்கும்படி சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை: தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.