இந்தியா

ஆக்ரா: உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலைச் சுற்றிய நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
புதுடெல்லி: திருமணத்துக்கு மறுநாள், மணமகன் வீட்டிலிருந்து 150,000 ரூபாய் ரொக்கம், நகைகளைத் திருடிச் சென்றுள்ளார் மணப்பெண். டெல்லி குருகிராம் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30ஆம் தேதி 119 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையடுத்து அங்கு காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பெங்களூரு: பெங்களூரின் கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் மாலத்தீவில் இருந்து வந்திறங்கிய விமானம் ஒன்றின் கழிவறையில் 3.2 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லும் பகுதியில் மும்பை - கோவா நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருகிறது. திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கட்டுமானப் பணிக்கான பெரிய இரும்புச் சட்டம் சரிந்து விழுந்தது. அதையடுத்து பாலம் இடிந்து சரிந்தது.