செம்பவாங் வெந்நீர் ஊற்றுப் பூங்கா $4.3 மில்லியன் செலவில் 1.1 ஹெக்டர் நிலப்பரப்பில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இன்று முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.
புதிய பூங்காவில் படிக்கட்டு குளம் சிறப்பு அம்சமாக அமைந்திருக்கிறது.
பூங்காவின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் படிக்கட்டு குளம் நான்கு படிநிலைகளைக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு படியிலும் தண்ணீர் வழிந்து வரும்போது வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து நீர் குளுமை அடைகிறது.
போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், கல்வி அமைச்சர் ஓங் யி காங் உள்ளிட்ட செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் பல மரச்செடிகளையும் நட்டார்கள்.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோரும் எங்கும் எளிதாகச் சென்று வரும் வசதிகளும் புதிய பூங்காவில் இருக்கின்றன.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity