விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மரணம், 16 பேர் காயம்

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி நேற்றுக் காலையில் தீவு விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓரமாக நின்றிருந்த 'டிப்பர்' லாரியின்மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வூழியர்களில் ஒருவர் மரணமடைந்தார். அதில் பயணம் செய்த மற்ற 16 ஊழியர்களும் காயமடைந்தனர். லாரியின் 36 வயது ஓட்டுநர் கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டியதே இவ்விபத்துக்குக் காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். விபத்தைத் தொடர்ந்து லாரியில் சென்ற வெளிநாட்டு ஊழியர்களில் இருவர் சுயநினைவை இழந்ததாக போலிஸ் தெரிவித்தது. அந்த 17 வெளிநாட்டு ஊழியர்களும் 'பிரைட் ஏஷியா கன்ஸ்ட்ரக்‌ஷன்' எனும் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் என அறியப்படுகிறது.

படம்: வான்பாவ் நாளிதழ் வாசகர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!