முழுமையாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி பெற்றவர்கள் ஆகியோர், இனி தரை வழி சிங்கப்பூருக்குள் நுழையும்போது சோதனைச்சாவடிகளில் சுகாதார உறுதிமொழியை நிரப்பித் தரத் தேவையில்லை.
வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 15) இது நடப்புக்கு வருகிறது.
இருப்பினும், லிமானம்வழி அல்லது கப்பலில் சிங்கப்பூருக்குள் நுழையும் எல்லா பயணிகளும் தொடர்ந்து எஸ்ஜி வருகை அட்டையை நிரப்ப வேண்டும்.
குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் புதன்கிழமை (ஏப்ரல் 13) அன்று இதைத் தெரிவித்தது.
உட்லண்ட்ஸ் துவாஸ் சோதனைச்சவாவடிகளில் உள்ள போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு தரை வழி நாட்டுக்குள் நுழையும்போது எஸ்ஜி வருகை அட்டையை நிரப்பத் தேவையில்லை எனும் முடிவு எடுக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.
இந்த நடவடிக்கைக்குத் தகுதி பெற, கட்டுப்படுத்தப்பட்ட நாடு அல்லது வட்டாரத்துக்கு கடந்த ஏழு நாளில் பயணிகள் சென்றிருக்கக்கூடாது.
கொவிட்-19 தொற்று அதிகம் உள்ள நாடுகளை சிங்கப்பூர் கட்டுப்படுத்தப்பட்டதாக வகைப்படுத்தியுள்ளது.
தற்போது எந்த நாடும் அந்தப் பட்டியலில் இல்லை.