ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் உல்லாச ஓட்டக் குழுவான தாறுமாறு ரன்னர்ஸ், இந்திய மாணவர்களின் கல்விச் செலவுக்கு திட்டமிட்டதைவிட இரட்டிப்பு நிதி சேர்த்துள்ளனர்.
தாறுமாறு ரன்னர்ஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சுமார் 60,000 வெள்ளி திரட்டப்பட்டது.
ஆனால் 30,000 வெள்ளியைத் திரட்டுவதின் நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது.
திரட்டப்பட்ட சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.
தேவையுள்ள இந்திய மாணவர்களுக்கு உபகாரச்சம்பளங்களும் கடன் உதவியும் அளித்து சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை உதவி வருகிறது.
ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி தொடங்கிய ஓட்டம், சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முடியும்.
மொத்தம் 26 மணி நேரத்துக்கு ஓட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 10 பேர் கலந்துகொண்டு ஒரு மைல் (1.65 கிலோமீட்டர் ) ஓடி வருகின்றனர்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் ஆகியோர் ஓட்டத்தில் இன்று காலை சுமார் 1.65 கிலோமீட்டர் தொலைவு ஓடி தங்கள் பங்கை ஆற்றினார்கள்.
"திரு சண்முகம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருவது பலருக்கும் தெரியும். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் ஆரோக்கிய வாழ்க்கைமுறை எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது," என்று தாறுமாறு ரன்னர்ஸ் குழுவின் நிறுவனர் ரமேஷ் செல்வராஜ், 43 கூறினார்.