கலை இயக்குநரும் படைப்பாளருமான 56 வயது அரவிந்த் குமாரசாமிக்கு சிங்கப்பூரின் ஆக உயரிய கலை, இலக்கிய விருதான கலா சாரப் பதக்க விருது வழங்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் அவரது 35 ஆண்டுகால கலைப்பணியை இவ்விருது அங்கீகரித்தது.
இவ்வாண்டு கலாசாரப் பதக்கம் பெற்ற மற்றொருவர் மேடைக் கலைஞர் திரு கோக் ஹெங் லியூன்.
நேற்று அதிபர் மாளிகையில் நடந்தேறிய விருது வழங்கும் நிகழ்வில், அதிபர் ஹலிமா யாக் கோப் இருவருக்கும் விருதளித்துச் சிறப்பித்தார்.
உள்ளூர் வங்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய திரு அரவிந்த், 12 ஆண்டுகளுக்கு முன்னர் வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக கலைத்துறையில் ஈடுபட முடிவெடுத்தார்.
சிறுவயதிலிருந்து தொடர்ந்த கனவை, மனதுக்குப் பிடித்த ஒன்றில் முழுமையாக ஈடுபடுவதே மிக மகிழ்ச்சியானது என்றார் அவர்.
கடந்த 18 ஆண்டுகளாக அப்சரஸ் ஆர்ட்ஸ் கலை நிறுவனத் தின் கலை இயக்குநராக பணியாற்றி வரும் திரு அரவிந்த், பல்வேறு பாரம்பரிய கலைப் படைப்பு களை உள்ளூரிலும் வெளியூரிலும் அரங்கேற்றியுள்ளார்.
வீணை, நடனம், கர்நாடக இசை ஆகிய கலைகளில் தேர்ச்சிபெற்ற அரவிந்த் இலங்கையில் பிறந்தவர். 1988ல் சிங்கப்பூரில் குடியேறினார். சிங்கப்பூரரான இவருக்கு 1999ல் இளங்கலைஞர் விருது வழங்கப் பட்டது.
இந்திய நடனக் கலைஞர்கள் மாதவி கிருஷ்ணன், நீலா சத்திய லிங்கம், சாந்தா பாஸ்கர் என கலாசார பதக்க விருதினை பெற்ற நடனக்கலைஞர்களின் வரிசையில் இடம்பெறுகிறார் திரு அரவிந்த்.
“சிங்கப்பூரின் கலைச் சூழலுக்கு எங்கள் ஒவ்வொருவரின் பங்கும் வேறுபட்டதாக இருந்துள்ளது. ஒரு கலை இயக்குநராக, ஆண் கலை ஞராக இவ்வரிசையில் இடம்பெறு வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர்.
1990ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்திய நடனக்கலைஞருக்கு கலா சாரப் பதக்க விருது வழங்கப்பட்டிருப் பதைச்சுட்டிய திரு அரவிந்த், தனது கலைப்பணி தொடர்வதற்கு விலை மதிப்பில்லாத இவ்விருது பெரிதும் ஊக்குவிப்பதாகவும் கூறினார்.
திரைப் படைப்பு, எழுத்துப்பணியில் ஆற்றிய பங்களிப்புக்காக மேடைக் கலைஞர் கோக் ஹெங் லியூனுக்கு கலாசாரப் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் ஆக உயரிய கலை இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் 1979ஆம் ஆண்டு முதல், மேடைக்கலை, ஒவியக்கலை, நடனம், இசை, இலக்கியம், திரைக் கலை உள்ளிட்ட கலை இலக்கியத் துறைகளில் தலைசிறந்து விளங்கி, அரும்பணி ஆற்றி உள்ளோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஒலி வடிவமைப்பாளர் குவோ நிங்க்ரூ, கலைஞர் ஹோ ருவை ஆன், கேலிச்சித்திர இயக்குநர் ஜெர்ரோல்ட் சோங், இசையமைப் பாளர் ரிட் சூ ஆகிய நால்வருக்கும் இந்த ஆண்டு இளம் கலைஞர் விருது வழங்கப்பட்டது.
இளம் கலைஞர்களின் படைப்பாற்றலையும் கலையார்வத்தையும் ஊக்குவிக்கும் வண்ணம் வழங்கப்படும் இவ்விருதினை நேற்றைய நிகழ்வில் நால்வருக்கும் அளித்து சிறப்பித்தார் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங்.
மக்கள் கழகத்தின் துணைத் தலைவருமான அவர், “கலைஞர் களைக் கொண்டாடும் கலாசார பதக்க விருதும், இளங்கலைஞர் விருதும் சிங்கப்பூரின் தனித்துவம் வாய்ந்த கலைச் சூழலை வளர்ப்பதில் தேசிய கலைகள் மன்றம் கொண்டு உள்ள கடமையுணர்வை பறைசாற்று கின்றன,” என்று கூறினார்.
விருது பெற்ற அனைவரும் சிங்கப்பூர் கொடியை உலகளவில் உயரப் பறக்கவிட்டிருக்கின்றனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்விருதுகள் வருங்கால தலைமுறையினரையும் ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரி வித்தார் அதிபர் ஹலிமா யாக்கோப்.