ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் மதுக்கூடத்திற்குச் செல்வதற்காக தன் ஏழு வயதுக் குழந்தையைப் பல மணி நேரம் காரில் தவிக்க விட்டுச்சென்ற மாதை அவ்வட்டாரக் காவல்துறை கைது செய்தது.
அந்த 35 வயது மாதின் பெயர் வெரோனிக்கா ஏலியட். பெற்ற குழந்தையைப் புறக்கணித்த குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குகிறார்.
வெரோனிக்கா மதுக்கூடத்திலிருந்து வெகுநேரம் கழித்து கடும்போதையில் கால்களில் காலணிகள் கூட இல்லாமல் காரில் விட்டுச்சென்ற மகளைக் காண வந்ததாக அவ்வட்டாரக் காவல்துறை தெரிவித்தது.
அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ‘தி பெர்ஃபெக்ட் ஸ்பாட்’ மதுக்கூடத்திற்குள் குழந்தை ஒன்று தன் தாயைத் தேடி வந்ததாக தனக்குத் தகவல் கிடைத்தது என அது மேலும் கூறியது.