மேற்கு அயர்லாந்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
தான் பிறந்த இடத்தை மீண்டும் காண வேண்டும் என்பதற்காக தனது புது முதலாளியிடம் இருந்து தப்பித்து 27 நாள்கள் யார் கண்ணிலும் சிக்காமல் கிட்டத்தட்ட 64 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளது கூப்பர் என்கிற நாய்.
ஏப்ரல் 1ஆம் தேதி டன்கேனான் என்ற பகுதியில் கூப்பரை ஒரு நிலையத்தில் இருந்து தத்தெடுத்துள்ளார் நைஜல் பிளமிங் என்ற ஆடவர்.
தனது நாய்க்கு துணையாக கூப்பர் இருக்கும் என்ற நோக்கத்தில் அவர் கூப்பரைத் தத்தெடுத்தார்.
கூப்பர் காரில் ஏறிய சில நிமிடங்களிலேயே தப்பித்து ஓடியது.
அதன் பின்னர் நைஜல் சமூக ஊடகம் மற்றும் நண்பர்கள்வழி உதவியை நாடினார்.
கூப்பர் தந்திரமாக யார் கண்ணிலும் சிக்காமல் தனது மோப்ப சக்தியையும் புத்திக்கூர்மையையும் பயன்படுத்தி இரவு நேரங்களில் காட்டுவழியாகப் பயணம் செய்தது.
சிலர் கூப்பரை அடையாளம் கண்டு தகவலும் அனுப்பினர். ஆனாலும், அது மக்களிடம் இருந்து தப்பியோடியது.
பிறகு ஏப்ரல் 27ஆம் தேதி குக்ஸ்டவுன் அருகே கூப்பர் இருப்பதாகத் தகவல் வர நைஜல் அங்கு விரைந்தார்.
அதன்பிறகு கூப்பரை அவர் மீட்டார். கூப்பர் அந்தப் பகுதியில்தான் பிறந்தது என்பது பிறகுதான் அவருக்குத் தெரிந்தது.
தனக்கு மீண்டும் கூப்பர் கிடைத்தது பெருமகிழ்ச்சி தருவதாக நைஜல் இணையத்தில் கூறினார். உதவியவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.