கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கியப் பேர்வழிகளில் தொழில் அதிபர் ஜோ லோவும் ஒருவர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் மலேசிய அதிகாரி களிடம் இருப்பதாக மலேசிய உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் தெரிவித்துள்ளார். ஜோ லோவை நீதிக்குமுன் நிறுத்த சட்ட நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் திரு முகைதின் கூறினார்.
"ஜோ லோவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருந் தும் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின் றனர். இருப்பினும் இன்னும் சில தகவல்கள் தேவைப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது சிறிது தாமதம் ஆகலாம்," என்றும் திரு முகைதின் யாசின் கூறினார்.