ஆசியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது

ஆசியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது

1 mins read
6a6701f8-16df-4533-9f98-ed69cfc612e3
-

சிட்னி: உல­கின் பல நாடு­க­ளால் தேடப்­ப­டு­ப­வ­ரும் ஆசி­யா­வின் மிகப்­பெ­ரிய போதைப்பொருள் கடத்­தல் மன்­ன­னு­மான 57 வயது சி ஸி லோப் நெதர்­லாந்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். போதைப்­பொ­ருள் குற்­றங்­கள் தொடர்­பான விசா­ர­ணைக்­காக ஆஸ்­தி­ரே­லிய அதி­கா­ரி­கள் அவரைத் தங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்க வலி­யு­றுத்­துகின்­ற­னர்.

ஆஸ்­தி­ரே­லி­ய போலி­சா­ரின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க, பல ஆண்­டு­க­ளாக தேடப்­பட்டு வந்த லோப்பை வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று டச்சு போலி­சார் கைது செய்­த­னர். சீனா­வில் பிறந்த கன­டிய குடி­யு­ரி­மை கொண்ட லோப் ஆசி­யா­வின் பெரும் கடத்­தல் மன்­ன­னாக வலம் வந்­தார். ஐநா­வும் இவரைப் போதைப்­பொ­ருள் கும்­ப­லின் தலைவனாக இருக்­கக்­கூ­டும் என்று கூறி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­கி­டையே, பிலிப்­பீன்­சில் நடை­பெற்ற போதைப் பொரு­ளுக்கு எதி­ரான போரில் பாது­காப்புப் படை­யி­னர் 13 பேரைக் கொன்­றனர். இதில் போலிஸ்­கா­ரர் ஒரு­வ­ரும் மாண்­டார். மேலும் இரண்டு போலி­சார் காய­ம­டைந்­த­னர்.

குறிப்புச் சொற்கள்