வாஷிங்டன்: அமெரிக்கா, இந்தோனீசியாவிற்கு மொடெர்னா நிறுவனத்தின் நான்கு மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை வழங்கவுள்ளது.
இந்தோனீசியாவில் மோசமடையும் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலைக் கையாள உதவ அந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
கோவேக்ஸ் அனைத்துலகத் தடுப்பூசிப் பகிர்வுத் திட்டத்தின்கீழ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
கொவிட்-19 நெருக்கடியைச் சமாளிக்க சிரமப்பட்டுவரும் இந்தோனீசிய மக்களுக்கு ஆதரவு வழங்க தடுப்பூசிகளை வழங்குவதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் கூறினார்.
உலகின் நான்காவது ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடு இந்தோனீசியா. ஆசியாவில் கொவிட்-19 கிருமிப் பரவலால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அதுவும் ஒன்று.