ஈப்போ: போதைப்பொருள் கடத்தல்: இந்திய நாட்டவர் உள்ளிட்ட மூவர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ: போதைப்பொருள் கடத்தல்: இந்திய நாட்டவர் உள்ளிட்ட மூவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
67d5a0e6-01c2-401a-9ea6-8950db680408
-

ஈப்போ: மலே­சி­யா­வின் ஈப்­போ­வில் போதைப்­பொ­ருள் கடத்­தி­ய­தாக மூன்று பேர் மீது தனித்­த­னி­யா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டது. கடத்­தப்­பட்ட போதைப்­பொ­ருள்­களில் 62 கிலோ எடை­யுள்ள கஞ்­சா­வும், 161 கிராம் யாபா என்­னும் போதை மாத்­தி­ரை­களும் அடங்­கும்.

குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­கள் 42 வய­து இந்­தி­யா­வைச் சேர்ந்த நாரா­ய­ணன் லோக­நா­தன், இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த 21 வயது புத்­தேரி அடெ­லியா, மலே­சி­யா­வைச் சேர்ந்த 26 வயது எம்.ஹேம­மா­லினி ஆகி­யோர் ஆவர்.

4.10.21ஆம் தேதி போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோத­னை­யில் நாரா­ய­ணன் 62 கி.கிராம் கஞ்­சாவை பண்­டார் லாஹாட் மைன்ஸ் என்­னும் இடத்­தில் உள்ள ஒரு வீட்­டில் வைத்­தி­ருந்­த­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டது. ஹேம­மா­லி­னி­யும் புத்­தோரி அடெ­லி­யா­வும் இன்­னொ­ரு­வர் உத­வி­யு­டன் அதே நாளில், அதே பகு­தி­யில் இன்­னொரு வீட்­டில் 161கிராம் யாபா போதை மாத்­தி­ரை­களைக் கடத்தியதாக குற்­றம் சாட்­டப்­பட்­டது.

இவர்கள் மீதான குற்­றச்­சாட்டு நீதி­மன்­றத்­தில் நிரூ­பிக்­கப்­பட்­டால் மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம் என்று கூறப்படுகிறது.