ஈப்போ: மலேசியாவின் ஈப்போவில் போதைப்பொருள் கடத்தியதாக மூன்று பேர் மீது தனித்தனியாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடத்தப்பட்ட போதைப்பொருள்களில் 62 கிலோ எடையுள்ள கஞ்சாவும், 161 கிராம் யாபா என்னும் போதை மாத்திரைகளும் அடங்கும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் 42 வயது இந்தியாவைச் சேர்ந்த நாராயணன் லோகநாதன், இந்தோனீசியாவைச் சேர்ந்த 21 வயது புத்தேரி அடெலியா, மலேசியாவைச் சேர்ந்த 26 வயது எம்.ஹேமமாலினி ஆகியோர் ஆவர்.
4.10.21ஆம் தேதி போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில் நாராயணன் 62 கி.கிராம் கஞ்சாவை பண்டார் லாஹாட் மைன்ஸ் என்னும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஹேமமாலினியும் புத்தோரி அடெலியாவும் இன்னொருவர் உதவியுடன் அதே நாளில், அதே பகுதியில் இன்னொரு வீட்டில் 161கிராம் யாபா போதை மாத்திரைகளைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.