சிட்னி: நிறுவனங்களை வாங்கு
வதற்கான வழக்கறிஞர்கள் முதல் தரவு பகுப்பாய்வு வரை ஊழியர்
களின் தேவை ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ளது.
எல்லை மூடியிருப்பதைத் தொடர்ந்து, சில துறைகளில் திறனாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், 15 ஆண்டுகளில் முதல்முறையாக நிறுவனத்தில் சேருவோருக்கென்று போனஸ் வழங்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அத்துடன் ஆண்டுக்கு இரண்டு முறை சம்பள உயர்வு மறுபரிசீலனையும் செய்கின்றன.
இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளதால், தொழில்நுட்ப ஊழியர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. மேலும் ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும் முயற்சியாக, சில நிறுவனங்கள் அடிப்படை ஊதியத்தை 15 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.