வெலிங்டன்: நியூசிலாந்தில் ஓமிக்ரான் கிருமி வகையால் ஏற்படும் பாதிப்பு உச்சத்தை எட்டி குறையத் தொடங்கியதும் கொவிட்-19 தடுப்பூசி, சமூக இடைவெளி விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று அந்
நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் உறுதி அளித்துள்ளார்.
கட்டுப்பாடுகளை எதிர்த்து நாடாளுமன்றம் அருகே காவல்
துறையினருடன் ஆர்ப்பாட்டக்
காரர்கள் கைகலப்பில் ஈடுபட்டதை அடுத்து திருவாட்டி ஆர்டர்ன்
இந்தத் தகவலை வெளியிட்டார்.
கடந்த இரண்டு வாரங்களாக, தலைநகர் வெலிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தின் அருகில் உள்ள சாலைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
லாரிகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்
களைப் பயன்படுத்தி சாலை மறி
யலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தைக் கைவிடும்படி நியூசிலாந்து அரசாங்கத்துக்கு ஆர்ப்பாட்டக்
காரர்கள் நெருக்குதலைத் தருகின்றனர். நியூசிலாந்தில் ஓமிக்ரான் கிருமி வகை மார்ச் மாத நடுப்
பகுதியிலிருந்து இறுதிக்குள் உச்சத்தை எட்டி, அதன் பிறகு குறையத் தொடங்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
அதன் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தேவை குறையும் என்றும் அதுதொடர்பான விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் திருவாட்டி ஆர்டர்ன் கூறினார்.
"கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்ப அனைவரும் விரும்பு கிறோம். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட முன்னதாகவே, கூடிய விரைவில் அந்த நாள் வரும்.
"ஆனால் நீங்கள் வற்புறுத்துவதால் அந்த நாள் வராது. நியூசிலாந்து மக்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று உறுதி செய்யப்பட்டதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்," என்று ஆர்ப்பாட்டக்காரர்களிடம் திருவாட்டி
ஆர்டர்ன் தெரிவித்தார்.
தடுப்பூசித் திட்டத்தை எதிர்த்து முதலில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் பிறகு திருவாட்டி ஆர்டர்னுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் எதிரானதாக உருமாறியது.
முறையற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நடந்துகொண்டதற்காகவும் பொது இடத்தில் இடையூறு விளைவித்ததற்காகவும் நேற்று எட்டு பேரை நியூசிலாந்து காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறை அதிகாரிகள் சிலர் மீது மனிதக் கழிவு வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நியூசிலாந்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏறத்தாழ 16,000ஆகப் பதிவாகி உள்ளது. கொவிட்-19 காரணமாக அந்நாட்டில் இதுவரை 53 பேர் மாண்டுவிட்டனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெற்றவர்களில் 94 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.