பெர்லின்: உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உக்ரேனியர்கள் பலர் அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள்.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உக்ரேனிய அகதிகள் போலந்து, சிலோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளை
அடைந்துவிட்டனர்.
ஜெர்மனிக்குச் செல்லும் உக்ரேனிய அகதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.
ஜெர்மனியின் ரயில் சேவையை நடத்தும் நிறுவனம், உக்ரேனிய அகதிகளை இலவசமாக ஜெர்
மனிக்குக் கொண்டு செல்கிறது.
இந்நிலையில், உக்ரேனிய அகதி களை வரவேற்கும் நிலையமாக ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள பிரதான ரயில் நிலையம் மாறியுள்ளது.
2015ஆம் ஆண்டிலும் மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பாவுக்குத் தப்பிய அகதிகள் பலரை ஜெர்மனி ஏற்றுக்கொண்டது.
பெர்லின் ரயில் நிலையத்தின் ஒரு மாடி தற்காலிக வரவேற்பு நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது.
பசியோடு வரும் அகதிகளுக்கு சூடான உணவைத் தொண்டூழியர்கள் அங்கு பரிமாறுகின்றனர். அவர்களுக்குத் தேவையான குளிர்கால ஆடைகள், காலணிகள் ஆகியவற்றை அவர்கள் வழங்குகின்றனர்.
போரின் கொடுமை அறியாத பச்சிளங் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள் ஆகியவற்றை ஜெர்மன் தொண்டூழியர்கள் கொடுத்து மகிழ்வித்தனர்.
கடந்த சில நாள்களாக பெர்
லினில் உக்ரேனிய அகதிகளுக்கு நிதி திரட்டும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ரஷ்யப் படையெடுப்பால் தங்கள் உடைமைகளையும் சொந்த நாட்டையும் விட்டு வந்த அகதிகளுக்கு உதவ நகரெங்கும் பல
நன்கொடைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உக்ரேனியர்களும் ஐரோப்பியர்கள் என்பதால் அவர்
களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட
ஜெர்மனியர்கள் பலர் முன்வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பல்வேறு உதவி அமைப்புகள் தெரிவித்தன. பெர்லின் ரயில் நிலையத்துக்கு வரும் உக்ரேனிய அகதிகளுக்கு ஜெர்மனியர்கள் பலர் தங்குமிடம் வழங்கி உதவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.