கொவிட்-19 கிருமித் தொற்றினால் ஒருவரின் மூளை சுருங்குவதோடு, அவருக்கு ஞாபகச் சக்தி இழப்பு ஏற்படலாம் என ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உணர்வுகள், ஞாபகம், நுகரும் திறன் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் மூளை பகுதிகளில் பாதிப்பு ஏற்படவும் சாத்தியம் இருப்பதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 தொற்றினால் மூளை பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக ஆதாரம் இருப்பதாக ஆராய்ச்சில் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 தொற்று உள்ளவர்களிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சிலருக்குக் கவனக் குறைபாடு, தகவல்களை உள்வாங்குவதில் தாமதம் போன்ற பிரச்சினைகள் இருந்தன.
இந்தப் பாதிப்பு தற்காலிகமா அல்லது நீண்டக்கால விளைவுகள் உள்ளனவா என்பது பற்றி இன்னும் கூடுதல் ஆராய்ச்சி செய்யவேண்டும் எனக் கூறப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கூறவில்லை.