அமெரிக்காவில் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கான பால் பவுடரில் 60 விழுக்காடுதான் இருப்பில் உள்ளது.
கடந்த பிப்ரவரியில் குழந்தை பால் பவுடரை தயாரிக்கும் செய்யும் முக்கிய தொழிற்சாலை மூடப்பட்டதே இந்த தட்டுப்பாட்டுக்குக் காரணம்.
அமெரிக்காவில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் தங்கள் மழலைகளுக்கு பால் கொடுக்க இந்தப் பால் பவுடரைத் தான் நம்பி உள்ளன. அதனால் அதன் பற்றாக்குறையால் அங்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சிக்கலான நேரத்தில் ஊட்டா மாநிலத்தைச் சேர்ந்த மாது ஒருவர், தன் தாய்ப்பாலை விற்க முன்வந்துள்ளார்.
இந்தத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தங்கள் தாய்ப்பாலை விற்றுவரும் பல தாய்மார்களில் அலிசா சிட்டி என்ற மாதும் ஒருவர்.
சுமார் 4,000 அவுன்ஸ் - அதாவது 118 லிட்டர் தாய்ப்பால் தமது வீட்டு குளிர்பதனப் பெட்டிகளிடம் உள்ளது என்றார் அலிசா.
தனக்கு தேவைக்கு அதிகமான தாய்ப்பால் ஊறுவதாகவும் அதை வைக்க இடமில்லை என்றும் அவர் கூறினார்.
தாய்ப்பாலை விற்று மற்றவர்களுக்கு உதவியாவது செய்யலாம் என்பது இவரது எண்ணம்.
ஓர் அவுன்ஸ் தாய்ப்பாலை ஒரு அமெரிக்க டாலருக்கு விற்க அவர் திட்டமிடுகிறார்.