உலகம் முழுவதும் 780 பேருக்குக் குரங்கம்மை தொற்றி சம்பவங்கள் தன்னிடம் உறுதிப்படுத்தப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்திடம் கூறியுள்ளது.
குரங்கம்மை வழக்கமாக ஏற்படாத 27 நாடுகளில் அந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த மே 13ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை இந்தச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.
மற்ற நாடுகளும் தொற்றுச் சம்பவங்களை அடையாளம் காணும் என்றும் தொற்று மேலும் பரவும் என்றும் சாத்தியம் இருப்பதாக அது குறிப்பிட்டது.
அதே நேரத்தில் குரங்கம்மைத் தொற்றால் உலகுக்கு மிதமான அபாயமே உள்ளது என்று அமைப்பு கூறியது.
பிரிட்டன், ஸ்பெய்ன், போர்ச்சுகல், கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளில்தான் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மிகச் சிலரே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.