பறவைக் காய்ச்சலுக்குப் பலியான கம்போடியக் குழந்தை

நோம்பென்: கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்ட இரண்டு வயதுச் சிறுமி உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்போடியாவில் இரண்டு நாள்களில் இருவர் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டு மாண்டுவிட்டனர்.

அண்மைக் காலமாகப் பாலூட்டிகளுக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் விழிப்புடன் இருக்குமாறு உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும், மனிதர்களுக்குத் தொற்று ஏற்படும் சாத்தியம் குறைவு என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மாண்ட சிறுமியின் பெயர் தெரிவிக்கப்பட்டவில்லை. அவர் கம்போடியாவின் பிரே வெங் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு எச்5என்1 தொற்று ஏற்பட்டது என்றும் கம்போடிய சுகாதார அமைச்சு கூறியது.

ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்வே ரியெங் மாநிலத்தில் 50 வயது ஆடவர் ஒருவரும் பறவைக் காய்ச்சலால் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்போடியாவில் கடந்த 20 ஆண்டுகளில் பறவைக் காய்ச்சலால் 59 பேர் உயிரிழந்தனர். மாண்ட இரண்டு வயதுச் சிறுமியின் வீட்டில் சில கோழிகள் இறந்ததாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

பொதுவாக, பறவைகளுடன் நேரடித் தொடர்பு ஏற்படும்போது பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவக்கூடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!