மணிலா: ஜெலாவத் புயல் தாக்கியதில் பிலிப்பீன்ஸில் ஒருவரைக் காணவில்லை, பல்லாயிரம் பேர் தங்களது வீட்டைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்கு ஓடினர். தென்பகுதி பெருந்தீவான மிண்டானோவை புயல் சுழற்றித் தாக்கியதில் பெருவெள்ளம் ஏற்பட்டதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திங்கட்கிழமை காலை புயல் பலவீனமடைந்தபோதிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கான அபாயம் நீடிப்பதாக வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என்று அப்பகுதியில் உள்ள மீட்பு செயலாண்மைகள் கூறினர். ஆனால், மிண்டாநௌவின் கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையிலிருந்து 11,729 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையாக நிலச்சரிவுக்கு முன்னதாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அபாயங்கள் நிறைந்த பகுதிகளில் வெள்ளம், மழையினால் ஏற்படும் நிலச்சரிவுகள் போன்ற பேரிடர்கள் இடம்பெறுவது இயல்பு என்று சமீபத்திய புயல் புல்லட்டின் கூறியது.
அபாயங்கள் நிறைந்த பகுதிகளில் வெள்ளம், மழையினால் ஏற்படும் நிலச்சரிவுகள் போன்ற பேரிடர்கள் இடம்பெறுவது இயல்பு என்று சமீபத்திய புயல் நிலவரம் தொடர்பான ஆக அண்மைய அறிக்கை கூறியது.
புயல் வரும் பாதையில் அல்லது அதற்கு அருகாமையில் கப்பல் போக்குவரத்து தடைபட்டது.100க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் கிட்டத்தட்ட 5,000 பேர் தங்குமிடம் தேடிக்கொண்டிருந்தனர்.சிலர் படகோட்டம் தடைசெய்யப்பட்ட துறைமுகங்களில் சிக்கிகொண்டனர் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 புயல்களும் சூறாவளிகளும் நாட்டையோ அல்லது அதன் சுற்றியுள்ள நீரையோ தாக்கி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று, நாட்டில் அதிக சேதம் படுத்தியுள்ளது.