டாக்கா: பங்களாதேஷ் அகதிகள் முகாம்களில் வசிக்கும் ரோஹிங்யா அகதி ஒருவருக்கான மாத உணவு நிதியை 8 அமெரிக்க டாலரில் இருந்து 10 அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளது ஐக்கிய நாட்டு நிறுவனம். ஜனவரி 1ஆம் தேதி முதல் இது நடப்புக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஐக்கிய நாட்டு நிறுவனம் உணவு நிதிக்காக 876 மில்லியன் நிதி திரட்ட முயற்சி செய்தது. ஆனால் அதில் பாதி கூட நன்கொடையாக கிடைக்கவில்லை. அதனால் அகதிகளுக்கான உணவு நிதி குறைக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் அகதிகளுக்கு 12 டாலரில் இருந்து 10 டாலராக ஒருவருக்கான உணவு நிதி குறைக்கப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் அது 8 டாலராக மாறியது. நன்கொடைகள் வழங்கி அகதிகளுக்கு உதவும் மக்களுக்கு ஐநா நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது.