லாஸ் ஏஞ்சலிஸ்: பெர்ல் துறைமுகத்தில் இருந்த அமெரிக்கக் கடற்படையை 1941ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதியன்று ஜப்பான் தாக்கியது.
இதில் அமெரிக்க வீரர்கள் பலர் மாண்டனர். அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான பல கப்பல்கள் கடலில் மூழ்கின.
இத்தாக்குதலின்போது அமெரிக்கப் போர்க்கப்பல் யுஎஸ்எஸ் அரிசோனாவில் கடற்படை வீரராக இருந்து செயல்பட்ட லுயிஸ் கொன்டர் ஏப்ரல் 1ம் தேதி காலமானார்.
அவருக்கு வயது 102.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள தமது வீட்டில் இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது.
பெர்ல் துறைமுகத் தாக்குதலில் உயிர் பிழைத்த மற்ற அமெரிக்க வீரர்கள் அனைவரும் மாண்டுவிட்டனர்.
அந்த வரிசையில் திரு கொன்டரின் மரணம் அமெரிக்கக் கடற்படையையும் அவரது குடும்பத்தையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.