சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முழுநேர தேசிய சேவையாளரான 22 வயது கார்ப்பரல் கோக் யுவென் சின் துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் மாண்ட சம்பவத்தில் அதிகாரி ஒரு வரால் அவர் நீரேற்றுக் கிணற்றுக்குள் தள்ளி- விடப்பட்டதாக விசாரணைக் குழு கண்டு பிடித்துள்ளது. இவ்வாண்டு மே 13ஆம் தேதி நிகழ்ந்த இந்த அசம்பாவிதம் தொடர்பில் நடந்த- வற்றை நேற்று அது வெளியிட்ட அறிக் கையில் விவரித்தது. 'ஓஆர்டி' எனப்படும் முழுநேர தேசிய சேவை நிலையிலிருந்து தயார்நிலை தேசிய சேவை நிலைக்கு மாறும் தினமான மே 16ஆம் தேதியை முன்னிட்டு கேக் வெட்டி விளையாட்டாகத் தொடங்கிய கொண்டாட்டம் பின்னர் கார்ப்பரல் கோக்கின் மரணத்தில் முடிந் தது.
மே 13ஆம் தேதி இரவு 8.40க்கும் 9.04 மணிக்கும் இடையில் அவரது குழு- வைச் சேர்ந்த 23 பேர் அவருக்கு கேக் கையும் நினைவுப் பரிசையும் வழங்கி கொண்டாட்டத்தை நடத்தினர். கொண்டாட்டம் முடிந்த பிறகு அந்தக் குழுவைச் சேர்ந்த சிலர், கார்ப்பரல் கோக்கை தீயணைப்பு நிலையத்திலிருந்த நீரேற்றுக் கிணற்றை நோக்கி தூக்கிச் சென்று அதன் ஓரத்தில் அமர வைத்தனர். இரவு 9.07 மணிக்கு, அதிகாரிகளில் ஒருவர் கார்ப்பரல் கோக்கிற்கு பின்னால் சென்று அவரைக் கிணற்றுக்குள் தள்ளி- விட்டதாக அறிக்கை கூறியது.