ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை
மையமாக வைத்து உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகவலை அவர் உறுதிசெய்யவில்லை.
சிவகார்த்திகேயனின் தந்தை காவல்துறையில் பணியாற்றியவர். தம் தந்தையின் மறைவு குறித்து அவர் அடிக்கடி நினைவுகூர்வார்.
தம் தந்தையின் நினைவாக தன் மகனுக்கு குகன்தாஸ் என்று அவர் பெயர் சூட்டியுள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சிவாவின் மிக நெருங்கிய நண்பர். அதனால், தன் தந்தையின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை நெல்சனுடன் சிவா பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.