சிங்கப்பூரில் மேலும் 6 பேருக்கு கிருமித்தொற்று
சிங்கப்பூரில் புதிதாக ஆறு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இன்று (மார்ச் 10) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166 ஆனது.
அவர்களில் 93 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
எஞ்சி உள்ளோரில் 13 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அமைச்சின் மருத்துவச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் கூறினார்.
#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்