டான் டோக் செங் மருத்துவர், நோயாளிகள் மூவருக்கு முதற்கட்ட பரிசோதனையில் கிருமித்தொற்று
டான் டோக் செங் மருத்துவமனையில் பணியாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அந்த மருத்துவமனையில் மேலும் நால்வருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் முதற்கட்டமாக அவர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவர் ஒருவரும் ஒரே சிகிச்சைப் பிரிவில் (ward) உள்ள நோயாளிகள் மூவரும் அந்த நால்வர் ஆவர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருமி தொற்றிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனைத்து பணியாளர்கள், வருகையாளர்கள், நோயாளிகள், ‘வார்ட் 9D’யில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோர் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளில் ஒருவர் 72 வயது மாது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது. ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து டான் டோக் செங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த மருத்துவமனையின் ‘வார்ட் 9D’யில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு இருமலும் காய்ச்சலும் ஏற்பட்டது.