மூன்றாவது தடுப்பூசியின் பக்கவிளைவுகளும் ஒரே மாதிரியானவை: இஸ்ரேல்

படம்: ஏஎஃப்பி

இஸ்ரேலில் ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசியை மூன்றாவது முறையாக போட்டுக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது முறை தடுப்பூசி போட்டுக்கொண்டபோது இருந்ததைப் போன்ற அல்லது அதைவிட குறைவான, பக்கவிளைவுகளே இருந்ததாக முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுவரை 240,000த்திற்கும் மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கேலிட் எனும் சுகாதார சேவை வழங்கும் நிறுவனம் கூறியது.

அவர்களில் சுமார் 4,500 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

88 விழுக்காட்டினர், இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டபோது இருந்ததைப் போன்ற அல்லது அதைவிட குறைவான பக்கவிளைவுகள் தற்போதும் உள்ளதாக தெரிவித்தனர்.

0.4 விழுக்காட்டினருக்கு சுவாசிப்பதில் சிரமும் 1 விழுக்காட்டினர் பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவ சிகிச்சையை நாடியதாகவும் குறிப்பிட்டனர்.

டெல்டா வகை கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடும் திட்டத்தை இஸ்ரேல் சுமார் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு மூன்றாவது தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பே இஸ்ரேல் அந்த பணியைத் தொடங்கிவிட்டது.

அந்த வகையில் மூன்றாவது தடுப்பூசியின் பக்கவிளைவுகள், அவற்றின் செயல்திறனுக்கான சோதனைக் களமாக தற்போது இஸ்ரேல் விளங்குகிறது.

ஃபைசர் தடுப்பூசி
இஸ்ரேல்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!