உள்ளூரில் புதிதாக 32 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று
சிங்கப்பூரில் இன்று (ஆகஸ்ட் 21) நண்பகல் நிலவரப்படி உள்ளூரில் புதிதாக 32 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. அவர்களில் 11 பேருக்கு முந்தைய நோயாளிகளுடன் தொடர்புண்டு. அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
இதர ஐந்து பேருக்கும் முந்தைய நோயாளிகளுடன் தொடர்புண்டு என்றாலும் தொற்று கண்டறியப்பட்டபோது இவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை.
எஞ்சிய 16 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வெளிநாடுகளில் இருந்து வந்த ஐந்து பேருக்கு தொற்று இருந்ததை அடுத்து அவர்களுக்கு தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதிதாக கிருமி தொற்றிய 37 பேரையும் சேர்த்து தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 66,443 ஆகியது.