கொவிட்-19 தனிமைக்காலம் 10 நாள்களாக குறைக்கப்படும்
கொவிட்-19 தொற்றும் அபாயம் உடையோரை தனிமைப்படுத்துவதற்கான காலம் 14 நாள்களிலிருந்து 10 நாள்களாகக் குறைக்கப்படும் என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.
டெல்டா வகை கிருமியின் குறுகிய அடைகாத்தல் காலம் (incubation period) இதற்குக் காரணம். இந்தப் புதிய நடைமுறை அடுத்த வாரத்திலிருந்து நடப்பிற்கு வரும்.
டெல்டா வகை கிருமியின் அடைகாத்தல் காலம் நான்கு அல்லது குறைவான நாள்களாக இருப்பதாக பணிக்குழு தெரிவித்தது. ஒப்புநோக்க, முன்னதாக பரவிய கிருமி வகையின் அடைகாத்தல் காலம் சராசரியாக ஆறு முதல் எட்டு நாள்களாக இருந்தது.
டெல்டா வகை கிருமியைப் பொறுத்தவரை, ஒருவரை கிருமி தொற்றியதிலிருந்து ஏறக்குறைய நான்கு நாள்களில் அவருக்குக் கிருமித்தொற்று கண்டறியப்பட்டுவிடுகிறது என்பதே இதற்கு அர்த்தமாகும்.