கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஜோகூர்
மலேசியாவின் ஜோகூர், திரங்கானு மாநிலங்கள் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 25) கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்றன.
தேசிய மீட்சித் திட்டத்தில் மூன்றாம் கட்டத்திலிருந்து நான்காம் கட்டத்திற்கு அவை மாறுகின்றன. நான்காம் கட்டத்தில் பொது, தனியார் துறை வேலையிடங்கள் 100 விழுக்காடு இயங்கலாம். தற்போது, அது 80 விழுக்காடாக உள்ளது.
நேரடி நிகழ்ச்சிகள், திருமண உபசரிப்பு நிகழ்வுகள் போன்ற சமூக நடவடிக்கைகளும் நடைபெற அனுமதி வழங்கப்படும். அவை 50 விழுக்காடு இயங்கலாம்.
மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதனை இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) அறிவித்தார்.