கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மலேசியா செல்ல அனுமதி

படம்: இணையம்

கோத்தா பாரு: இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பயணிகள் மலேசியாவுக்கு வரலாம் என்று மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொவிட்-19 தொற்றுக்கு எதிரான கோவோக்சின் தடுப்பூசியை அவசரகாலத்துக்குப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள், கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாகக் கூறி உள்ளன.

இந்நிலையில், கிளந்தானிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு நேற்று வருகையளித்த திரு கைரி, கோவேக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியத் தயாரிப்புத் தடுப்பூசியை மலேசியா பயன்படுத்தாவிட்டாலும் அந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை வரவேற்கும்,” என்றார்.

மலேசியாவிடம் போதுமான அளவுக்கு தடுப்பூசி கைவசம் உள்ளதால் கோவேக்சின் போன்ற வேறு தடுப்பூசிகளை வாங்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அவர் கூறினார்.

கோவேக்சின் தடுப்பூசி 78 விழுக்காடு தடுப்பாற்றல் கொண்டது என பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

கோவேக்சின்
மலேசியா
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!