சிங்கப்பூரில் கூடுதலானோரிடம் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கூடுதலானோரிடம் ஓமிக்ரான் கிருமி கண்டறியப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் ஓமிக்ரான் திரிபு பரவிவரும் வேளையில், அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 22) இதனைத் தெரிவித்தது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் 65 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது. பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட பரிசோதனை முறை மூலம் தொற்று கண்டறியப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருபவர்களிடம் கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் அதன் எல்லை நடைமுறைகளைக் கடுமையாக்குகிறது.

“கிருமி தொற்றியவர்களின் தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், சமூக அளவில் கிருமிப் பரவலை இப்போதைக்கு எங்களால் கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால், சமூகத்தில் ஓமிக்ரான் பரவுவது எப்போது என்பதே கேள்வி,” என்று அமைச்சு கூறியது.

திங்கட்கிழமை நிலவரப்படி, சமூகத்தில் ஆறு பேரிடம் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!