கொவிட்-19 மாத்திரைகளுக்கு அமெரிக்கா ஒப்புதல்
ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொவிட்-19 மாத்திரைக்கு ஒப்புதல் வழங்கியதை அடுத்து, அமெரிக்கா மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள அதேபோன்ற மாத்திரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று சிகிச்சைக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ள முதல் இரண்டு மாத்திரைகள் இவையாகும்.
ஆனால் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொவிட்-19 மாத்திரையைவிட மரணங்களையும் கடுமையான நோய் பாதிப்பையும் ெமர்க் தயாரித்த மாத்திரையின் செயல்திறன் குறைவாகும்.
கடும் நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள பெரியவர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் மெர்க் தயாரித்த மொல்னுபிரவிர் மாத்திரை, மருத்துவமனை சிகிச்சை, மரணங்கள் ஆகியவற்றை 30 விழுக்காடு குறைத்தது.
கொரோனாவுக்கு வேறு சிகிச்சை செய்ய முடியாத சமயங்களில் இந்த மாத்திரையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம் என்று அமெரிக்க உணவு மருந்துத் துறை வியாழக்கிழமை (டிசம்பர் 23) அன்று தெரிவித்தது.
ஒப்புநோக்க, ஃபைசர் தயாரித்த பேக்ஸ்லோவிட் மாத்திரை 90 விழுக்காட்டு செயல்திறனைக் கொண்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பின் கடுமையையும் மரணத்தையும் குறைக்கவும் இந்த மாத்திரைகள் உதவும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
மாத்திரைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்றார் அவர்.