நான்காவது தடுப்பூசியைப் பரிசோதிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் 150 ஊழியர்களுக்கு நான்காவது கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
நோய் ஆபத்து அதிகமுள்ள தனது குடிமக்களுக்கு நான்காவது தடுப்பூசி போடுவது பற்றி இஸ்ரேல் பரிசீலித்து வருகிறது.
இவ்வேளையில் இந்த மருத்துவ ஆய்வு இடம்பெறுகிறது.
டெல் அவீவுக்கு வெளியில் உள்ள ராமாட் கான் எனும் இடத்தில் உள்ள ஷீபா மருத்துவனையில் ஆய்வு நடத்தப்படுகிறது.
நான்காவது தடுப்பூசியின் பாதுகாப்பு, 'ஆன்டிபாடி' எனும் எதிர்ப்பாற்றல் அணுக்களை உருவாக்குவதில் அதற்குள்ள செயல்திறன் போன்றவை ஆய்வு செய்யப்படும்.
பொதுவாக நான்காவது தடுப்பூசி தேவையா என்பதைத் தீர்மானிக்க இது உதவும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
இஸ்ரேல் குறிப்பிட்ட சில பிரிவனருக்கு, இரண்டாவது பூஸ்டர், அதாவது நான்காவது தடுப்பூசியைப் போடவேண்டும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சின் நிபுணர் குழு கடந்த வாரம் பரிந்துரை செய்தது.
60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், உடலில் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்குத் தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டது.
இஸ்ரேலின் தலைமை மருத்துவர் இன்னும் இந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.